மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!

You are currently viewing மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!

முல்லைத்தீவு – மல்லாவி கொல்லவிளாங்குளம் பகுதியில் நேற்று மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முற்றத்தில் வெளிச்சம் போடுவதற்காக போடப்பட்டிருந்த மின்சார வயரினை பிடித்த வேளையிலேயே குறித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

இலக்கம் 92 கொல்லவிளாங்குளம் ,வவுனிக்குளம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் சுதாஜினி ( 38 ) வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த பின் திருமணமாகி 5 மாதங்கள் ஆன நிலையில் இந்த துன்பியல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார் .

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments