இன்று காணாமல் ஆக்கப்பட்ட வவுனியா தாய்மார்கள் முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையை அவரது மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்தனர்.

அவர்கள் அவருடன் உரையாடிய போது , அவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பதற்கான 10 காரணங்கள் உள்ள துண்டு பிரசுரத்தை அவரிடம் கொடுத்தனர். அதை படித்தவுடன், அவருடைய முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
பின்னர் அவர் நம் அனைவரையும் ஆசீர்வதித்தார்.


இந்த தாயமார்கள் , மன்னார் மாவட்டத்தைச் சுற்றியுள்ள மன்னார் பஸ் நிலையம் , முருங்கன், நாலாட்டான் ஆகிய இடங்களில் சைக்கிள் சின்னத்தின் ஆதரவு துண்டு பிரசுரத்தை விநியோகித்தனர். மன்னார் பஸ் நிலையத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு பயணிக்கும் மக்களுக்கும் விநியோகித்தனர்.
இந்த தாய்மார்கள் வன்னியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று இந்த துண்டு பிரசுரத்தை வழங்கினர். இப்பணியில் 50 மேற்பட்ட தாய்மார்கள் ஈடு பட்டனர்.

இந்த தாய்மார்கள் தங்கள் சைக்கிள் சின்னத்தின் ஆதரவு பிரச்சாரத்தை, கடந்த புதன் 29, 2020 அன்று யாழ் தந்தை செல்வாவின் நினைவு இடத்தில் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் யாழ்ப்பாணத்தில் , யாழ்ப்பாண பஸ் நிலையத்திலிருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்லும் மக்களுக்கு சைக்கிள் சின்னத்தின் ஆதரவு துண்டு பிரசுரத்தை விநியோகித்தனர்.
செயலாளர் ராஜ்குமார் கூற்றுப்படி, அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்கள் முழுவதும் 12,000 சைக்கிள் சின்னத்தின் ஆதரவு துண்டு பிரசுரத்தை விநியோகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.