முல்லைத்தீவில் குளத்தில் மூழ்கி சிறுவன் உட்பட இருவர் பலி!

You are currently viewing முல்லைத்தீவில் குளத்தில் மூழ்கி சிறுவன் உட்பட இருவர் பலி!

முல்லைத்தீவு சிறீலங்கா காவல்துறை பிரிவுக்குட்பட்ட அளம்பில் பகுதியில் ஆலயத்திற்காக தாமரை இலை பறிப்பதற்காக குளத்தில் இறங்கிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவமானது, இன்று(01) காலை 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குளத்தில் இறங்கிய இருவரும் நீரில் மூழ்கிய நிலையில் கிராம மக்களின் முயற்சியால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில், அளம்பில் வடக்கை சேர்ந்த 25 வயதுடைய இராஜசேகர் நிசாந்தன் மற்றும் பத்து வயதுடைய சிவநேசன் பிரணவன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, முல்லைத்தீவு – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் தவறி விழுந்து இன்று(01) இரண்டு மாணவிகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply