மாந்தையில் இடம்பெற்ற போராட்டம் – முள்ளிவாய்க்கலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி உறவினர்கள் செயற்பாடு
வட தமிழீழம் – மன்னார் மாவட்டம் மாந்தை பகுதியில், இன்று(15.05.2025) மே 18ம் நாளை முன்னிட்டு சிங்கள பேரினவாத அரசு நடத்திய தமிழின அழிப்பிற்கு நீதி கோரி போராட்டம் ஒன்றை நடத்தினார்கள்
முள்ளிவாய்க்கலில் நடைபெற்றது இன அழிப்பின் உச்சகட்ட நிகழ்வாகவும், அதில் தங்கள் உறவுகள் படுகொலை செய்யப்பட்டனர் , மேலும் காணமலாக்க பட்ட எமது உறவுகள் எங்கே”, “சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலை மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும்”, “மே 18 கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும்” எனும் வாசகங்கள் அடங்கிய பலகைகள் தாங்கியவாறு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் முக்கியமாக கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சர்வதேச சமூகத்துக்கு தங்கள் கோரிக்கையை வெளிப்படுத்தும் விதமாக நம்பிக்கையை இழக்கவில்லை என்றும், நீதி கிடைக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் வலியுறுத்தினர்.






