முள்ளிவாய்க்காலில் மூன்றாவது நாளாக தோண்டியும் ஏமாற்றம்!

You are currently viewing முள்ளிவாய்க்காலில் மூன்றாவது நாளாக தோண்டியும் ஏமாற்றம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு சிறீலங்கா காவற்துறை பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டுக் கழக மைதானத்தில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து மூன்றாவது நாளாக அகழ்வுப் பணி இடம்பெற்றது.

கொழும்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த அகழ்வுப்பணியானது கொழும்பில் இருந்து வருகைதந்த பொலிஸ் குழுவினரால் செவ்வாய்க்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்டது.

பின்னர், நேற்றுமுன்தினம் வரை எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டு, நேற்றைய தினம் காலை மீண்டும் தண்ணீர் அகற்றும் பணி இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் கிழக்கு, மேற்கு பகுதிகளில் அண்ணளவாக 11க்கு மேற்பட்ட இடங்களில் இதுவரை அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, எதுவும் கிடைக்காமல் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments