எதிர்வரும் மே 18-ஆம் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளில் நடிகர் விசால் திரை கலைஞர்களோடு பங்கேற்கும் “நட்சத்திர இசை திருவிழா கொண்டாட்டம்” நடைபெறுவதை எதிர்த்து
தோழர் கொளத்தூர் மணி ,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், தியாகு, கோவை கு.இராமகிருட்டிணன், சுப.உதயகுமாரன்,கண.குறிஞ்சி, பொழிலன், இயக்குனர்கள் களஞ்சியம், கௌதமன், மருதுபாண்டியன் ஆகியோரும் இந்நிகழ்வின் தேதியை மாற்றக் கோரி குரல் கொடுத்தனர்.
இதுகுறித்து தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் திரு நாசர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் “இந்த நிகழ்வில் நடிகர் விஷால் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்து இருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பேசி நிகழ்ச்சியின் தேதியை தள்ளி வைத்திருப்பதாகவும் ” தெரிவித்திருக்கிறார்கள்