யாழிலிருந்து வந்து வவுனியாவில் குடும்ப பெண் கடத்தல் ! வானுடன் 4 பேர் கைது !

You are currently viewing யாழிலிருந்து வந்து வவுனியாவில் குடும்ப பெண் கடத்தல் ! வானுடன் 4 பேர் கைது !

வவுனியாவில் கடத்தப்பட்ட குடும்ப பெண் மீட்கப்பட்டதுடன் வானுடன் 4 பேரை கைது செய்துள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வான் ஒன்றில் வந்த குழுவினர் வவுனியா, கொக்குவெளி, அரசடி வீதியில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவரை கடத்திச் சென்றுள்ளனர்.

இதேவேளை, வீட்டிலிருந்த பெண்ணின் மாமியார், பெண்ணை தூக்கிச் சென்றவர்களை விரட்டிய போது அவரை உதைந்து விட்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து மாமியார் வவுனியா சிறீலங்கா தலைமைப்  காவற்துறை நிலை குற்றத்தடுப்பு பிரிவு சிறீலங்கா காவற்துறையில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, விரைந்து செயற்பட்ட சிறீலங்கா காவற்துறையினர் குழுவினர் குறித்த வாகனம் சென்ற பாதையை பின் தொடர்ந்து சென்று குறித்த வானை பளைப் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளதுடன், குறித்த பெண்ணையும் மீட்டுள்ளனர்.

இதேவேளை, கடத்தலுக்கு பயன்படுத்த வாகனம் சிறீலங்கா காவற்துறையினரால் மீட்கப்பட்டதுடன், 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் மணியந்தோட்டம், இருபாலை, சுன்னாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த 4 பேரையும் நீதிமன்றில் முற்படுத்த சிறீலங்கா காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments