யாழில் சிங்கள காவற்துறை ஆயுதமுனையில் அடக்குமுறை – கஜேந்திரகுமார் எம்.பி எச்சரிக்கை!!

You are currently viewing யாழில் சிங்கள காவற்துறை ஆயுதமுனையில் அடக்குமுறை – கஜேந்திரகுமார் எம்.பி எச்சரிக்கை!!

வட தமிழீழம் , யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதிக்கான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்துள்ளார்.

ஜெகதீஸ்வரன் சற்குணதேவி உள்ளூராட்சி  மன்றத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளராக போட்டியிட இருந்த நிலையில் அவரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்தநிலையில், இன்று (22) காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேட்பாளர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மருதங்கேணி  சிங்கள காவற்துறையினரால் சில தினங்களுக்கு முன்பு அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆனால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட காரணத்தால் அவர் கூட்டத்திற்கு செல்லவில்லை.

இதனையடுத்து, இன்றையதினம் அவரது வீட்டிற்கு வந்த சிங்கள காவற்துறை அவர் ஏன் கூட்டத்திற்கு வரவில்லை என்று கேட்டனர்.அதற்கு நான் இனி வேட்பாளர் இல்லை என்று சற்குணதேவி  கூறியபோது, கலந்து கொள்ளச் சொன்னால் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று சிறீலங்கா காவற்துறையினர் அவரைத் திட்டியுள்ளனர்.

இதனையடுத்து, எந்த காரணமும் கூறாமல் உடல்நிலை சரியில்லாத அவரது மகனை சிறீலங்கா காவற்துறையினர் ஆயுதமுனையில் கைது செய்துள்ளனர்.

சற்குணதேவி தனது வலுவான மற்றும் ஊழலற்ற அரசியல் செயற்பாட்டிற்காக சிங்கள  சிறீலங்கா காவற்துறையினரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றார்.     இந்நிலையில்   இன்று மருதங்கேணி சிறீலங்கா காவற்துறையினரினால் கைது செய்யப்பட்ட தனது மகனை பார்ப்பதற்காக சென்றவேளை சிறீலங்கா காவற்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply