யாழில் சொந்த காணியை விற்பனை செய்த வெளிநாட்டவர் கொள்ளை!

You are currently viewing யாழில் சொந்த காணியை விற்பனை செய்த வெளிநாட்டவர் கொள்ளை!

யாழில் தனது சொந்த காணியை விற்பனை செய்த வெளிநாட்டவர் ஒருவரின் பணமானது கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது காணியை விற்றுவிட்டு அந்தப் பணத்தினை எடுத்துச் சென்றவேளையே இவ்வாறு கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கொள்ளைச்சம்பவமானது நேற்று  இரவு 7 மணி அளவில் மானிப்பாய் சிறீலங்கா காவற்துறை பிரிவிற்குட்பட்ட சங்குவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 1 கோடியே 8 இலட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் மேற்கொண்ட முறைபாட்டுக்கு அமைய மானிப்பாய் சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments