யாழில் சோகம் – கணவாய் பிடிக்க கடலுக்கு சென்றவர் மாரடைப்பில் திடீர் மரணம்!

You are currently viewing யாழில் சோகம் – கணவாய் பிடிக்க கடலுக்கு சென்றவர் மாரடைப்பில் திடீர் மரணம்!

இன்றைய தினம் யாழில், கணவாய் பிடிப்பதற்கு கடலுக்கு சென்றவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதன் போது காக்கைதீவு, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கனகராசா சுரேஷ்குமார் (வயது 39) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் உட்பட சக தொழிலாளர்கள் என 5 பேர் கணவாய் பிடிப்பதற்கு, கடலினுள் தடி நடுவதற்காக படகினில் சென்றனர். இதன்போது குறித்த நபர் திடீரென மயக்கமடைந்தார்.

இந்நிலையில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மாரடைப்பினால் மரணம் சம்பவித்ததாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments