யாழில் பழைய மாணவர் ஒன்றுகூடலில் நடனமாடிய கனடாவில் புலம் பெயரந்து வசிப்பவர் மரணைம்!

You are currently viewing யாழில் பழைய மாணவர் ஒன்றுகூடலில் நடனமாடிய கனடாவில் புலம் பெயரந்து வசிப்பவர் மரணைம்!

யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழையில் பழைய மாணவர் ஒன்று கூடலில் நடனமாடிக்கொண்டிருந்த கனடாவைச் சேர்ந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் , மல்லாகம் பகுதியைச் சேர்ந்தவரும், தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருபவருமான நாகராஜா சசிதரன் (வயது 61) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை மகாஜன கல்லூரி பழைய மாணவர் ஒன்று கூடல் கடந்த சனிக்கிழமை தெல்லிப்பழை பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.

அதன் போது, பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை சிறீலங்கா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments