சர்வதேச ஊடக சுதந்திர தினத்தையொட்டி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் ஊடகவியலாளர்களால் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது படுகொலை செய்ப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு நீதி கோரியும் ஊடகவியலாளர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்துக்கு முன்பாக மாலை 3 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.