யாழில் மூளைக் காய்ச்சலால் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு !

You are currently viewing யாழில் மூளைக் காய்ச்சலால் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு !

மூளைக் காய்ச்சல் காரணமாக யாழில்(Jaffna) இளம் குடும்பப் பெண் ஒருவர்  நேற்றையதினம்(21) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியை சேர்ந்த கவிந்தன் சாமினி (22) என்ற குடும்பப் பெண் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு கடந்த 14ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மூளை காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply