யாழில் வயல் கிணற்றுக்குள் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

You are currently viewing யாழில் வயல் கிணற்றுக்குள் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் கிணறொன்றுக்குள்ளிருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலமானது யாழ். சாவகச்சேரி சிறீலங்கா காவற்துறை பிரிவுக்குட்பட்ட கிராம்புவில் பகுதியில் நேற்று  மாலை மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அங்குள்ள வயல் ஒன்றுக்கு பசளை இடச் சென்றவர்கள், வயல் கிணற்றுக்குள் வயோதிப பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ணுற்று சிறீலங்கா காவற்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனை தொடர்ந்து சிறீலங்கா காவற்துறையினர் சடலத்தை மீட்டு சாவகச்சேரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறீலங்கா காவற்துறையினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply