யாழில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி சடலமாக மீட்பு !

You are currently viewing யாழில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி சடலமாக மீட்பு !

யாழில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி ஒருவர் நேற்று முன்தினம் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பலாலி வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 86 வயதுடைய கனகசபாபதி றமநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் பொலிஸாருக்கு பிரதேச வாசிகள் வழங்கிய தகவலையடுத்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு பிள்ளைகள் இல்லை என்பதுடன் மனைவியும் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இவர் உணவினை வெளியில் இருந்து தினமும் பெற்று உண்பது வழக்கம் என்ற நிலையில், இவருக்கு வழமையாக உணவினை கொடுக்க பெண் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது அவரது நடமாட்டம் இருக்கவில்லை என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அயல் வீட்டாரின் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தபோது அவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதன் பின்னர், அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்,

சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாய பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்து சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சிறீலங்கா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments