யாழில் வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண்!

You are currently viewing யாழில் வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்  ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி , 50 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞனிடம் இருந்து 50 இலட்சம் ரூபாய் பணத்தினை மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

நீண்ட நாட்களாகியும் இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காத நிலையில், இளைஞன் தனது பணத்தினை திருப்பி கேட்ட வேளை, அதனை கொடுக்க மறுத்ததால், இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த சிறீலங்கா பொலிஸார், மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணை கைது செய்து , விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments