யாழில் 12 வயது சிறுமி மீது பலாத்கார முயற்சி நபர் நையப்புடைப்பு!

You are currently viewing யாழில் 12 வயது சிறுமி மீது பலாத்கார முயற்சி நபர் நையப்புடைப்பு!

யாழ்.தென்மராட்சியில் 12 வயதான சிறுமி மீது பலாத்கார முயற்சி செய்த நபரை பொதுமக்கள் அடித்து நொருக்கிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவரை சிறீலங்கா காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர். 

42 வயதான இரு திருமணங்கள் முடித்த குறித்த நபர் சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்வதற்கு முயற்சித்துள்ளார். குறித்த விடயத்தை சிறுமி அம்பலப்படுத்தியுள்ளார். இதனையடுத்து குறித்த நபரை மடக்கிய பொதுமக்கள் அடித்து நொருக்கியுள்ளனர். 

இதனால் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில்  சிங்கள  அரசுக்கான சிறீலங்கா காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments