யாழ்பாணத்தில் 24 மணிநேரத்தில் 286 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம்!8 பேர் சாவு!

You are currently viewing யாழ்பாணத்தில் 24 மணிநேரத்தில் 286 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம்!8 பேர்  சாவு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணிவரையான கடந்த 24 மணிநேரத்தில் 286 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. அவர்களில் 16 பேர் பி.சி.ஆர் பரிசோதனையிலும் 270 பேர் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 85 பேரும், யாழ்ப்பாணம் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 48 பேரும், கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 14 பேரும், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 19 பேரும், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 41 பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு காரைநகரில் 9 பேரும், நல்லூரில் 14 பேரும், சண்டிலிப்பாயில் 8 பேரும், உடுவிலில் 11 பேரும், தெல்லிப்பழையில் 2 பேரும், பருத்தித்துறையில் 28 பேரும், மருதங்கேணியில் 4 பேரும், ஊர்காவற்றுறையில் ஒருவரும், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2020 மார்ச்சிலிருந்து இன்று மாலை வரை 12 ஆயிரத்து 746 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் ஆயிரத்து 161 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 739 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை

யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொக்குவிலைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும், இருபாலையைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும், கொக்குவிலைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments