யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்!

You are currently viewing யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாண ( Jaffna) பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மே இரண்டாம் திகதி முதல் 44 நாட்களாக தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் இன்று (14) 10.45 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது சம்பள முரண்பாடு, MCA கொடுப்பனவு அதிகரித்து வழங்குதல் போன்ற பல நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக ஊழியர்சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து போராட்டமானது யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பேரணியாக வந்து பிரதான வாயிலில் கவனயீர்ப்பு போராட்டமாக இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments