யாழ். தென்மராட்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர்களுடன் இருவர் கைது !

You are currently viewing யாழ். தென்மராட்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர்களுடன் இருவர் கைது !

யாழ்.தென்மராட்சி – கொடிகாமம் சிறீலங்கா காவற்துறை பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் கொடிகாமம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை கொடிகாமம் சிறீலங்கா காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று(13.08.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, கிளாலி பகுதியிலிருந்து நேற்று(13) அதிகாலை 4.30 மணியளவில் கொடிகாமம் நோக்கி சட்டவிரோத மணலுடன் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனங்களே சிறீலங்கா காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் நேற்றையதினம்(13) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments