யாழ் தேர்தல் மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட வாக்குகள் நிராகரிப்பு!

You are currently viewing யாழ் தேர்தல் மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட வாக்குகள் நிராகரிப்பு!

சிறீலங்கா தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளாக 3 இலட்சத்து 97 ஆயிரத்து 41வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் 25 ஆயிரத்து 353 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம்(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலில் 3 இலட்சத்து 71 ஆயிரத்து 688 செல்லுபடியான வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில்,  வேட்பாளர்களான சஜித் பிரேமதாச பிரேமதாச 1 இலட்சத்து 21 ஆயிரத்து 177 வாக்குகளும் , பா.அரியநேந்திரன்  1 இலட்சத்து 16 ஆயிரத்து 688  வாக்குகளும் , ரணில் விக்ரமசிங்க 84 ஆயிரத்து 558 வாக்குகளும் , அநுரகுமார திஸாநாயக்க 27 ஆயிரத்து 086 வாக்குகளையும் பெற்றனர்.

அதேவேளை, ஏனைய வேட்பாளர்கள் மொத்தமாக 22 ஆயிரத்து 179 வாக்குகளையும் பெற்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments