தமிழீழ ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்ட கல்வித் தரைப்படுத்தலை தமிழ் மாணவர்கள் மீது திணித்த போது ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் நஞ்சு (சயனைட்) அருந்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் பொன். சிவகுமாரனை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மாணவர் எழுச்சி நாளாக நினைவுகூரப்படுகின்றது.
தமிழின விடுதலைக்காய் தன்னுயிர் தந்த முதல் தற்கொடையாளன் பொ.சிவகுமாரன் அவர்களின் 51வது ஆண்டு நினைவுதினம் வட தமிழீழம் யாழ் பல்கலைகழக மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் மலர் வணக்கம் செலுத்தி நினைவுகூறப்பட்டது.
– யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
















