யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களிடையே நேற்றைய நாள் (9) மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்றையதினம் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஏற்பட்ட மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.