யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் வரலாற்றுக் கடமை போற்றுதற்குரியது.

You are currently viewing யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் வரலாற்றுக் கடமை போற்றுதற்குரியது.
விடுதலைக்கான இலட்சிய நெருப்பை சந்ததிகளுக்கு கடத்த ஆயுதமாகும் இனழிப்பிலிருந்து உயிர்காத்த கஞ்சி.
முள்ளிவாய்க்கால் இனவழிப்பின்போது சிறீலங்கா அரசு உணவுத்தடை மருந்துத் தடையையும் ஏற்படுத்தி வன்னியில் பெரும் இனவழிப்பை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது புலிகளது ஆளுகையின்க கீழிருந்த மக்களது உயிர்காக்க அரிசிக்கஞ்சி வழங்கப்பட்டது.
பச்சைக்குழந்தைகள் கற்பிணித்தாய்மார்கள் நோயாளர்கள் முதியவர்கள் என எந்த வேறுபாடுகளும் இன்றி அதனையே குடித்து உயிர்பிழைக்க வேண்டியிருந்து.
அந்த வரலாற்றை எமது எதிர்கால சந்ததிக்கு கடத்திச் செல்லும் வரலாற்றுப் பணியை கடந்த காலம் போன்று தற்போதும் யாழ்ப்பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளார்கள்.
யாழ் வேம்படி மகளீர் கல்லூரி முன்பாக ஒரு பெரிய கிடாரத்தில் கஞ்சியும் பெரிய உரப்பையில் சிரட்டைகளுமாக நின்ற  பல்கலைக்கழக பொடியளும் பொம்பிழைப்பிள்ளைகளுமாக தங்களது வரலாற்றுப் பணியை ஆரம்பித்தார்கள்.
சிரட்டையில் கஞ்சியை உற்றி எடுத்தவாறு பாடசாலை வாயிலில் வரிசையில் நின்றார்கள்.
சிலர் ஏன் இந்தக் கஞ்சி என்பதனை தெளிவு படுத்தும் துண்டுப்பிரசுரங்களை வழங்கத் தொடங்கினார்கள்.
முதலில் பிள்ளைகளை ஏற்ற வந்த பெற்றோர்களுக்கு கஞ்சியை வழங்கினார்கள். துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினார்கள்.
பாடசாலை விட்டதும் பிள்ளைகள் வெளியே வரத் தொடங்கியதும். பிள்ளைகளுக்கு சிரட்டையுடன் கஞ்சினை நீட்டினார்கள் பலர் வாங்கினார்கள் சில பிள்ளைகள் வெக்கப்பட்டு வாங்காமல் சென்றார்கள். துண்டுப் பிரசுரங்களை அனைத்துப் பிள்ளைகளும் பெற்றுக் கொண்டார்கள்.
வெக்கப்பட்டு கஞ்சியை வாங்காது வந்த பிள்ளைகளை அருகில் பானையில் கஞ்சி வழங்கிய மாணவர்களிடம் அழைத்துச் சென்று அங்கு அவர்களுக்கும் கஞ்சிவாங்கி கொடுத்து பெரும்பாலான பெற்றோர் மாணவர்களது முயற்சிக்கு மதிப்பையும் உற்சாகத்தையும் அளித்ததையும் தமது பிள்ளைகளுக்கும் நல்ல வழிகாட்டலையும் வழங்கியதனையும் அவதானிக்க முடிந்தது.
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்காது என்பார்கள்.
2009 ஆம் ஆண்டில் இனவழிப்பில் தங்களது உறவுகள் கொல்லப்பட்டபோது அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதனைக்கூட புரிந்து கொள்ள முடியாத குழந்தைகளாக ஓடிந்திரிந்த குழந்தைகள் இன்று தனது மூதாதயர் சந்தித்த கொடூரங்களை தனது வருங்கால சந்ததிகளுக்கு மிகவும் இலாவகமாக எடுத்துரைக்கும் பணியை முன்னெடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.
அவர்களது பணி எம்மினத்தின் விடுதலைத்தீயை ஒருபோதும் அணையவிடாது.
எமது இனம் விடுதலை அடைவதனையும் எவரும் தடுத்துவிடவும் முடியாது.
இளம் தலைமுறை ஒன்று நிச்சயம் இந்த விடுதலைப் பயணத்தை முன்னெடுக்கும் பணியை ஒருநாள் கையேற்கும் என்ற ஒன்றை நம்பிக்கையுடன் கடந்த 16 ஆண்டுகள் இந்த விடுதலைத் தீயை அணையவிடக்கூடாதென்பதற்காக எவ்வித விட்டுக்கொடுப்புமின்றிப் போராடியவர்கள் எத்தனை அவமானங்கள் எத்தனை ஆபத்துக்கள். எத்தனை பழிச்சொல் எத்தனை இழிசொல்களுக்கு உள்ளானார்கள்.
அத்தனைக்கும் முகம் கொடுததவர்களுக்கும் பெரும் மனஆறுதலை நிச்சயமாக ஏற்படுத்துவதாக அமையும்.
இவர்களது உணர்வுகளை கட்டுப்படுத்த சிங்கள பௌத்த பேரினவாதிகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை எவ்வாறு வளைக்கலாம் என்று இப்போ மண்டையை போட்டு பிசைந்து கொண்டிருப்பார்கள்.
இனவழிப்பை வெளிப்படுத்தும் பதாகைகளுடன் ஊர்தி உலாவினால் ஊர்தி உரிமையாளர் தொடக்கம் அடிமட்ட தொண்டன் வரை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் விசாரணைக்கெடுபிடிகள்.
உங்களது அனைத்துத் தடைகளையும் கடந்து எமது இனவிடுதலைப் பயணம் தொடரும்.
கட்சிகள் கஞ்சி வழங்கினால் அரசியல் என்று கொச்சைப்படுத்துபவர்கள்
மாணவர்களது கஞ்சிக்கு என்ன சாயம் பூசப்போகிறீர்கள்.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply