யாழ் பல்கலைக்கழக மாணவர் 9பேர் காயம்!

You are currently viewing யாழ் பல்கலைக்கழக மாணவர் 9பேர் காயம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், மாணவர்கள் உட்பட  9 பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், குருநகர் – சிறுத்தீவுப் பகுதிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று நேற்றுமுன்தினம் (17.07.2023) சென்று பொழுதைக் கழித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் அவர்கள் கடலில் இறங்கி நீராடும் போது, அருகில் இருந்த பண்ணைக்குள் நுழைந்தனர்

அதனால் கடலட்டைப் பண்ணையில் காவலில் இருந்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாய்த்தர்க்கம் முற்றி இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதில் 7 மாணவர்களும், கடலட்டைப் பண்ணை உரிமையாளர் ஒருவரும், பண்ணை பணியாளர் ஒருவருமாக 9 பேர் காயமடைந்துள்ளனர்.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments