யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக வெளிநாடு தொடர்ந்தும் தடைகள் ஏற்படத்தப்படவேண்டும்!

You are currently viewing யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக வெளிநாடு தொடர்ந்தும் தடைகள் ஏற்படத்தப்படவேண்டும்!

இலங்கையின் உள்நாட்டுபோரின்போது மனித உரிமை மீறல்களில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக வெளிநாட்டு அரசாங்கங்கள் தொடர்ந்தும் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்,ஐக்கியநாடுகள் சேகரித்துள்ள ஆதாரங்களை அடிப்படையாக வைத்து இலங்கையின் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக வழக்குதொடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டுபோரின்போது மனித உரிமை மீறல்களில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக வெளிநாட்டு அரசாங்கங்கள் தொடர்ந்தும் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்,ஐக்கியநாடுகள் சேகரித்துள்ள ஆதாரங்களை அடிப்படையாக வைத்து இலங்கையின் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக வழக்குதொடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது..

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதிஇயக்குநர் மீனாக்ஷி கங்குலி இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது

 

இலங்கையின் உள்நாட்டு போரின்போது அட்டுழியங்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்டநால்வருக்கு எதிராக தடைகளைவிதித்துள்ளதன் மூலம் பிரிட்டன் பொறுப்புக்கூறலை முன்னோக்கி நகர்த்தியுள்ளது.

1983 முதல் 2009ம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் போது இரு தரப்பும் பரந்துபட்ட மனித உரிமை மீறல்கள்யுத்த குற்றங்களில் ஈடுபட்டன.

எனினும் தொடர்ந்து வந்த இலங்கையின் ஆட்சியாளர்கள் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதை மறைப்பதற்கும்,அதற்கு காரணமானவர்களை பாதுகாப்பதற்கும் முயற்சிசெய்துள்ளனர்.

சமூகத்தின் மீது தொடர்ந்து தாக்கத்தை செலுத்தும,மனித உரிமை மீறல்களிற்கான பொறுப்புக்கூறல் உட்பட, இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவது குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக அந்த நாட்டின் வெளிவிவகாரசெயலாளர் டேவிட் லாமி தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பயணத்தடை சொத்துக்களை முடக்குதல் ஆகியநடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

தடை செய்யப்பட்டவர்களில் யுத்தத்தின் இறுதியில் 58வது படைப்பிரிவிற்கு தலைமைதாங்கிய ஓய்வுபெற்ற ஜெனரல்சவேந்திர சில்வாவும் உள்ளார்.பலவந்தமாக காணாமல்போகச்செய்தல் தமிழ்மக்களை கொலை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.2025 ஜனவரி முதலாம் திகதி இவர் பாதுகாப்பு படை பிரதானியாக பதவி வகித்த பின்னர் ஓய்வு பெற்றார்.

தடை விதிக்கப்பட்ட மற்றுமொருவர் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி  வசந்த கரணாகொட.2008-2009ம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பில் இலங்கை கடற்படையால் இளைஞர்கள் கப்பம் பெறுவதற்காக கடத்தப்பட்ட விவகாரத்தில் இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் இவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்டு இவரை வடமேல்மாகாண ஆளுநராக்கியது.சில்வா கரணாகொட இருவருக்கும் எதிராக அமெரிக்காவும் தடைகளை விதித்துள்ளது

.முன்னாள் இராணுவதளபதி ஓய்வுபெற்ற ஜகத்ஜெயசூரிய வவுனியாவின் ஜோசப் முகாமிற்கு பொறுப்பாகயிருந்தவர்,இங்கு பலர் சித்திரவதைகள், பாலியல்வன்முறைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் ஆகியவற்றிற்கு உட்படுத்தப்பட்டனர்.

கேணல் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க தளபதி அந்த அமைப்பிலிருந்து விலகி, அரசசார்பு துணை இராணுவப்படையை2004 இல்உருவாக்கினார்.இரணடு தரப்பிற்காகவும் இவர் சிறுவர்களை படையணியில் சேர்த்தார்

படுகொலைகளில் ஈடுபட்டார், யுத்தத்தின் பின்னர் இவர் அரசாங்க அமைச்சரானார்.

ஐக்கிய இராச்சியத்தின் தடைகளிற்கு புதன்கிழமை பதிலளித்துள்ள இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை உள்நாட்டு பொறிமுறைகள் ஊடாகவே முன்னெடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளதுடன் அதனை வலுப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

இலங்கையி;ல் உள்நாட்டு போரின்போது இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான, ஆதாரங்களை சேகரிப்பதற்கான தொடர்தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையில் வெற்றிகரமாக நிறைவேற்றிய இணைத்தலைமை நாடுகளில் பிரி;ட்டனும் ஒன்று.

இலங்கை பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான  நடவடிக்கைகளை எடுக்காதவரை சர்வதேச நீதியே அவசியமானது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply