யேர்மனிய நாட்டிற்கு வரும் அநுர குமார திசாநாயக்க மீதான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்!!

You are currently viewing யேர்மனிய நாட்டிற்கு வரும் அநுர குமார திசாநாயக்க மீதான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்!!

தொடர்ந்து உலகை ஏமாற்றும் தந்திரோபாயங்களில் சிறீலங்கா அரசு!

யேர்மனிய நாட்டிற்கு வரும் அநுர குமார திசாநாயக்க மீதான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்!!

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிய வாழ் ஈழத்தமிழ் உறவுகளே!

“விழிப்புத்தான் விடுதலைக்கான முதற்படி” எனும், தமிழீழ த் தேசியத் தலைவரது மகுட வாக்கியத்தின் உயிர்ப்பிலிருந்தே மிக அவசியமான காலக் கனதியின் அறிவிப்பினை யேர்மனிய வாழ் ஈழத்தமிழ் மக்கள் ஒவ்வொருவரது கவனத்திற்கும், விழிப்படைதலுக்குமாக வெளிப்படுத்துகின்றோம்.

சிறீலங்காப் பேரினவாத ஆட்சியாளர்களின் ஆட்சித் தொடர்ச்சியிலே, ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதியாக, இனத்துவேசமும், தமிழீழ மக்களாகிய எமது பூர்வீக வாழ்வியல்மீது தீவிர எதிர்ப்புக் கொண்டதுமான ஜே.வி.பி என்ற கொடிய முகத்தினை என்.பி.பி என்ற சிரித்த மூடியணிந்த அநுர குமார திசாநாயக்க பதவியேற்றுள்ளார். இவர் இவ்வாண்டு யூன்மாத நடுப்பகுதியிலே யேர்மனிய நாட்டிற்கு, இராசதந்திர நல்லுறவு மற்றும் பொருளாதார நலன்கள் கருதியும் வருவதாக அறிகின்றோம்.

வரலாற்று ரீதியாகத் தமிழ்த்தேசிய இனத்திற்கான வாழ்வியலைக் கொடிய போர்முறைகளால்ச் சீரழித்து, பூர்வீக அடையாளங்களைச் சிதைத்து, சொந்த மண்ணிலேயே உரிமைகள் பறிக்கப்பட்டு அடிமைகளாக்கி ஆண்ட ஆட்சியாளர்களது இன அழிப்பினை முள்ளிவாய்க்காலெனும் கொடிய கொலைக்களம் தாண்டியும் எமது இனம் சுமக்கின்றது.

இன்று அதிகாரத்தில் அமர்ந்துள்ள அநுர தரப்பு ஆட்சியாளர்கள், மேற்சொல்லப்பட்ட கொடுங்கோன்மைகளுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல. சிரித்த முகத்தோடு புற்றுநோயாகத் தமிழ்த்தேசிய ஆன்மாவின் ஆணிவேர்வரை ஊடுருவி, இனப்பிரச்சனையோ, தமிழ்த்தேசியத்தின் தனித்துவமான இருப்போ இல்லையெனவும், ஏற்றத்தாழ்வற்ற இன மத நல்லிணக்கமூடாக சமத்துவம் கட்டி வளர்க்கப்படுவதாக போக்குக் காட்டியடி உலகை ஏமாற்றி, தமிழினத்தை அபாயத்தின் ஆழத்திலே புதைத்து வருகின்றது.

அன்பான எமது மக்களே!

நிகழ்காலத்தே எமக்கு முன்னே தென்படும் பேராபத்தைக் கண்டு நாம் விழிப்படையத் தவறுவோமேயானால், தமது இளமைக்காலத்தைத் துறந்து, வாழ்வின் அத்தனை சுகங்களையும் தனிமனிதர்களாக அனுபவிக்காது பொது வாழ்விலே தம்மை ஈகம் செய்த ஒப்பற்ற ஆயிரமாயிரம் அற்புதமான தியாகிகள் கண்ட கனவுகளை எதிரிகளே எள்ளிநகையாட விடப்போகின்றோமா?

தேர்தலுக்கு முன்பாக பல பிரச்சார மேடைகளிலே அநுர அவர்கள் உரைத்த வாக்குறுதிகளை நம்பிநின்ற மக்களின் மனங்கள், அவை போலி வார்த்தைகளே என்பதை உணரத்தொடங்கியுள்ள நிலையிலே, நாமும் அதனை யேர்மனிய ஆட்சியாளர்களுக்கு எடுத்துரைக்கத் தயாராவோம்.

கொடிய சிறைகளிலே இன்னும் வாடிக் கிடக்கின்ற தமிழ் அரசியல்க் கைதிகளது விடுதலைக்கான கருணைக் கண்ணைத் திறக்கவோ, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு நீதி வழங்கவோ,போர்க்குற்றவாளிகளை தண்டிக்கவோ ,தமிழரது தாயக நிலங்களிலிருந்து இராணுவத்தினரை முற்றாக வெளியேற்றவோ,குறைந்தது சில நல்லெண்ண அடிப்படையிலான அறிகுறிகளைக்கூட வெளிப்படுத்தாத அநுரவின் முகத்திரையினை உலக அரங்கிலே கிழிப்பதற்கு ஓரணியாவோம்.

ஒரு சிங்களக் குடிமக்களேனும் இல்லாத, தமிழ் மக்களது நித்தியமான தனியார் நிலங்களிலும்,

தமிழர்களது தொன்றுதொட்ட வழிபாட்டுத் தலங்களாகப் பெயர் குறித்து விளங்கும் நிலப்பரப்புக்களிலும் இரவோடிரவாக, இராணுவ மற்றும் காவல்த்துறையினரின் பாதுகாப்போடு முளைவிட்டு ஆதிக்கம் செலுத்தும் பெளத்த விகாரைகளைத் துல்லியமாக உலக நீதியின் முன்னே அடையாளமிட்டு, மனுநீதியைக் கோரத் தயாராகுவோம்.

யேர்மனியிலே ஆரம்பிக்கப்பட்டிருக்கும் அநுர தரப்பினது இராசதந்திரப் பொருளாதார அணுகுமுறை போன்று, இன்னுமின்னுமாக உலக நாடெங்கிலும் ஓடி ஓடிச் செய்யப்போகும் பொய்ப் பரப்புரைகளுக்கும், சுயலாபமீட்டலுக்கும் தமிழ்த்தேசிய இனமும் அடகுவைக்கப்படுவதை அம்பலமாக்குவோம். கண்ணீரும் வலியுமே சொந்தமாக்கப்பட்ட எமது தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அனுகூலங்களுமற்ற அநுராவின் பறப்புக்கள் போலியானவையே என்பதை உலக அரங்கிலே அணிதிரண்டு ஆர்ப்பரிப்போம்.

என்றோ ஒருநாள் உலகம் விழிக்கும். உலகிற்கும் அன்றுதான் அது முதற்படியாகலாம். நாம் ஓயமாட்டோம் ஏனேனில் விழிப்புத்தான் விடுதலைக்கான முதற்படி.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

யேர்மனிய நாட்டிற்கு வரும் அநுர குமார திசாநாயக்க மீதான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்!! 1

பகிர்ந்துகொள்ள

Leave a Reply