லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: ஹிஸ்புல்லா ஏவுகணை தளபதி பலி!

You are currently viewing லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: ஹிஸ்புல்லா ஏவுகணை தளபதி பலி!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா ஏவுகணை தளபதி இப்ராஹிம் குபைசி கொல்லப்பட்டார். மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 5 நாட்களாக லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் மூலம் லெபனானில் 2 நாட்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 564-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இஸ்ரேலில் 8 இடங்களை குறிவைத்து நேற்றிரவு ஏவுகணைகளை வீசியதாக ஹிஸ்புல்லா அமைப்பு கூறியுள்ளது. இஸ்ரேலின் கூற்றுப்பட ஹெஸ்புல்லாவிலிருந்து 55 ரொக்கெட்டுகள் ஏவப்பட்டன.

முன்னதாக, லெபனானில் ஹிஸ்புல்லாவின் 1600 இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் திங்கள்கிழமை வான்வழித் தாக்குதல்களை நடத்தின. 10,000 ரொக்கெட்டுகளை அழித்ததாக அவர்கள் கூறினர்.

இந்த தாக்குதலில் இதுவரை 558 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 94 பெண்களும், 50 குழந்தைகளும் உள்ளனர். 1,835 பேர் காயமடைந்துள்ளனர்.

அல் ஜசீராவின் கூற்றுப்படி, 2006-இல் இஸ்ரேல்-லெபனான் போருக்குப் பிறகு லெபனான் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல் இதுவாகும்.

2006-ஆம் ஆண்டில், பல மாதங்கள் நீடித்த சண்டையில் 1,000 லெபனான் கொல்லப்பட்டனர். தற்போது, லெபனானில் பள்ளி, கல்லூரிகளுக்கு செப்டம்பர் 25 புதன்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

லெபனானில் நடத்தப்படும் இந்த நடவடிக்கைக்கு இஸ்ரேல் “வடக்கு அம்புகள்” என்று பெயரிட்டுள்ளது. தெற்கு லெபனானில் உள்ள வீடுகளில் ஹெஸ்பொல்லா ஏவுகணைகளை மறைத்து வைத்திருப்பதாகவும், அவை கிட்டத்தட்ட ஓராண்டாக இஸ்ரேல் மீது ஏவப்பட்டதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறுகிறது. அதே நேரத்தில், லெபனான் மற்றொரு காஸாவாக மாறுவதை விரும்பவில்லை என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.

மறுபுறம், லெபனானிடமிருந்து பதிலடி அச்சம் காரணமாக இஸ்ரேலில் ஒரு வார காலத்திற்கு அவசரநிலை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மந்திரி Yoav Galant இன் உத்தரவின் பேரில் அவசரகால முடிவை எடுக்க அமைச்சரவை அமைச்சர்கள் தொலைபேசி மூலம் வாக்களித்தனர்.

இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பின்னர், நெதன்யாகு லெபனான் மக்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். தனது ஆபரேஷனுக்கு நடுவில் வர வேண்டாம் என்று நெதன்யாகு கேட்டுக் கொண்டுள்ளார். இஸ்ரேலின் போர் ஹிஸ்புல்லாவுடன் உள்ளது.

ஹிஸ்புல்லாவின் மறைவிடத்திற்கு அருகில் வசிக்கும் மக்களை உடனடியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்திருந்தது. டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தகவல்படி, IDF செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகாரி சமூக ஊடகங்களில் ஒரு காணொளியை வெளியிட்டார்.

லெபனான் குடிமக்களை ஆபத்து மண்டலத்திலிருந்து விலகிச் செல்லுமாறு ஹகாரி எச்சரித்தார். “இஸ்ரேலிய இராணுவம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக மேலும் கொடூரமான தாக்குதல்களை நடத்தப் போகிறது. ஹிஸ்புல்லா வீடுகள் மற்றும் கட்டிடங்களில் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளது. நீங்கள் ஆயுதங்கள் இருக்கும் கட்டிடத்தில் இருந்தால், அவற்றை விரைவில் விட்டுவிடுங்கள். ” இந்த செய்தி அனைத்து லெபனான் நெட்வொர்க்குகள் மற்றும் தளங்களுக்கும் அரபு மொழியில் அனுப்பப்பட்டது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments