இதன்போது திட்டப் பணிப்பாளரும் பொறியியலாளருமான எஸ்.மாலதி மற்றும் பொறியியலாளர் விஜயகாந் தலைமையிலான குழுவினர் ஆளுநரை வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து, குடிநீர் விநியோகத் திட்டத்தின் கட்டுப்பாட்டு அறையின் செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டார்.
அதன் பின்னர், கடல் நீரை உள்ளெடுக்கும் நிலையம், சுத்திகரிப்பு மற்றும் விநியோகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
இது தொடர்பாக திட்டப் பணிப்பாளர் மற்றும் பொறியியலாளர்கள் ஆளுநருக்கு விளக்கமளித்தனர்.
தமிழ் மக்களின் வளத்தை சுரண்டுவது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் வடமராட்ச்சி கிழக்கு மக்களின் வயிற்றில் மண்ணள்ளிப்போடும் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது அத்தோடு வடமராட்சி கிழக்கு மக்களின் எதிர்ப்பை மீறி கட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.