கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் கஞ்சா பேதைப்பொருள் கடத்தி வரப்பட்ட போது வடமராட்சி – தொண்டமனாறு கடற்பரப்பில் வைத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது 168 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் மன்னார் சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.