வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உட்பட்ட மூவர் அதிகாலை கைது!

You are currently viewing வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உட்பட்ட மூவர் அதிகாலை கைது!

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் கடந்த இரவு ஏற்பட்ட குழப்ப நிலையின் தொடராக இன்று காலை வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உட்பட்ட மூவர் விசேட சிறீலங்கா காவல்த்துறையினர் அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஊரெழு பகுதியில் கடந்த இரவு கடமைக்கு இடையூறு விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இன்று அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக யாழ்.மாவட்ட சிறீலங்கா காவல்த்துறை பொறுப்பதிகாரியின் ஏற்பாட்டில் சிறீலங்கா விசேட காவல்த்துறை குழுவினர் இரவு வேளைகளில் பல்வேறு பகுதிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் உட்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments