வல்வெட்டித்துறையில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் , அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் கிருசாந்தன் (30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்ககு அழைத்துச் சென்று அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை சிறீலங்கா காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.