வல்வெட்டித்துறையில் வாள்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் 13 பேர் கைது!

You are currently viewing வல்வெட்டித்துறையில் வாள்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் 13 பேர் கைது!

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் சிறீலங்கா காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 5 வாள்கள், 2 மோட்டார் சைக்கிள் செயின்கள், 6 சரை கஞ்சா மற்றும் ஒரு கிராம் 650 மில்லிக் கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டதாகப் சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

பழைய வீடொன்றில் வன்முறைக் கும்பலொன்று வன்முறைக்கு தயாராகி வருவதாக பொலிஸாருக்குக் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சிறீலங்கா காவல்த்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டபோதே, குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் காவல்த்துறையினர் கூறினர்.

சந்தேக நபர்கள் 13 பேரும் வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments