வவுனியாவில் மக்களிடம் ஏமாற்றி நிதி சேகரித்த பெண் கைது!

You are currently viewing வவுனியாவில் மக்களிடம் ஏமாற்றி நிதி சேகரித்த பெண் கைது!

வவுனியா மாவட்டத்தில் மக்களிடம் தான் மனித உரிமை அமைப்பினை சேர்ந்தவர் என கூறி நிதி சேகரிப்பில் ஈடுபட்ட பெண் ஒருவரை வவுனியா சிறீலங்கா காவல்த்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்.


வடக்கு கிழக்கு தமிழ்மக்களை இலக்குவைத்து இவ்வாறு காவல்த்துறையில் அதை செய்யலாம் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு,வெளிநாட்டிற்கு அனுப்ப என பல்வேறு கோணங்களில் மக்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டு செல்கின்றார்கள் இவ்வாறு பதிக்கப்பட்ட பலர் காவல் நிலையங்களில் முறையிட்டுள்ளார்கள்.

இவ்வாறுதான் வவுனியா நகர்பகுதியில் தான்னை மனித உரிமை செயற்பாட்டாளர் என அடையாளப்படுத்தி நிதி சேகரிப்பில் ஈடுபட்ட பெண்ணினை கைதுசெய்துள்ளதுடன் இதுதொடர்பிலான விசாரணைகளை வவுனியா சிறீலங்கா காவல்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments