வவுனியாவில் முதலாவது கட்சியாக வேட்பு மனு தாக்கல் செய்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்!

You are currently viewing வவுனியாவில் முதலாவது கட்சியாக வேட்பு மனு தாக்கல் செய்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு நேற்றுமுதல் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் வவுனியா வடக்கு பிரதேசசபையில்  போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி இன்று தாக்கல் செய்தது.

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில்  போட்டியிடவுள்ளதாக தமிழ் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று மாலைவரை வவுனியா மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி மாத்திரமே தமது வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply