விடுதலைப்புலிகளின் தங்கம் இருப்பதாக சந்தேகித்து தனியார் காணியை தோண்டும் சிறீலங்கா காவற்துறை!

You are currently viewing விடுதலைப்புலிகளின் தங்கம் இருப்பதாக சந்தேகித்து தனியார் காணியை  தோண்டும் சிறீலங்கா காவற்துறை!

யுத்த காலத்தில் விடுதலை புலிகள் தங்கம் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியிலுள்ள தனியார் காணியில் நேற்று (16.08.2024) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றிருந்தது.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறீலங்கா காவற்துறை விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, பொலிஸார், இராணுவத்தினர், கிராம சேவையாளர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் இணைந்து அகழ்வு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

பைக்கோ இயந்திரத்தின் உதவியுடன் அவ் இடத்தை பல மணிநேரம் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போதும் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தோண்டப்பட்ட இடங்களில் எதுவும் கிடைக்காததால், மீண்டும் தோண்டப்பட்ட இடங்கை மூட நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி தர்மலிங்கம் உத்தரவிட்டதனை தொடர்ந்து மூடப்பட்டது

மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

-முல்லை
கதிர்-

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments