வெல்லாவெளி பகுதியில் கார் விபத்து ; மூவர் காயம்!

You are currently viewing வெல்லாவெளி பகுதியில் கார் விபத்து ; மூவர் காயம்!

மட்டக்களப்பு வெல்லாவெளி சிறீலங்கா காவற்துறை பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில், கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

இவ் விபத்து வியாழக்கிழமை (13) இடம்பெற்றதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த கார் வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியிலிருந்த பாலத்தின் ஒரு பகுதியை உடைத்து நீரோடையில் விழுந்துள்ளது.

இதன்போது, காரில் பயணித்தவர்கள் 03 பேர் காயமடைந்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply