14 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு – 4 இளைஞர்கள் கைது!

You are currently viewing 14 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு – 4 இளைஞர்கள் கைது!

14 வயதான சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் சிறீலங்கா காவற்துறையினால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய 19 வயது முதல் 26 வயதுக்குட்பட்டவர்களே 14 வயதுச் சிறுமியை தொடர்ச்சியாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் அச்சிறுமி சனிக்கிழமையே முறைப்பாடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த வேளைகளிலேயே சந்தேக நபர்கள் இந்த செயலை செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments