20 இலட்ச ரூபாய் பணத்துடன் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

You are currently viewing 20 இலட்ச ரூபாய் பணத்துடன் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

20 இலட்ச ரூபாய் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் பாண்டியன் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு – யோகபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தராசா ஜீவன் (வயது 27) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யோகபுரம் பகுதியில் இருந்து பாண்டியன் குளம் பகுதிக்கு 20 இலட்ச ரூபாய் பணத்துடன் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை பயணித்துள்ளார்.  இரவு 08.40 மணியளவில் நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இரவு நீண்ட நேரமாகியும் திரும்ப வராத காரணத்தால் , அவரது தொலைபேசிக்கு நண்பர்கள் அழைப்பு எடுத்த வேளை தொலைபேசி செயலிழந்து காணப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து இளைஞனை அவரது நண்பர்கள் தேடி சென்ற வேளை பாண்டியன் குள கரையில் அவரது மோட்டார் சைக்கிள் விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து குளத்தினுள் தேடிய வேளை இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments