3 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து. இளைஞர் ஒருவர் பரிதாப மரணம் !

You are currently viewing 3 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து. இளைஞர் ஒருவர் பரிதாப மரணம் !

 

வவுனியா ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில் நேன்று (30) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருநபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது…

நேன்று அதிகாலை ஓமந்தை இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில் நின்றிருந்த உழவியந்திரம் மற்றும் பழுதடைந்துநின்ற கப்ரக வாகனம் ஆகியவற்றுடன் அதே திசையில் பயணித்த பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் கப்ரக வாகனத்தில் இருந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் 23 வயதுடைய இராமச்சந்திரன் சதீஸ்குமார் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை ஓமந்தை  சிறீலங்கா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments