30 சமூக மட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டம்!

You are currently viewing 30 சமூக மட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டம்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மீள் எழுச்சிக்காக ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் இன்றைய தினம் தென்மராட்சி பூராகவும் இடம்பெறவுள்ள பூரண கடையடைப்பிற்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக இடம்பெறுகின்ற கண்டன எதிர்ப்பு போராட்டத்திற்கும் தென்மராட்சி சமூக பொது அமைப்புகளின் ஒன்றியம் பூரண ஆதரவை கூட்டாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த போராட்டத்தில் எமது சமூக பொது அமைப்புகளின் அங்கத்தவர்கள் அனைவரும் முழுமையாக பங்கெடுப்பார்கள் என தென்மராட்சியில் இயங்குகின்ற சமூக, பொது அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் எமது மண்ணில் இடம்பெற்ற அனைத்து போராட்டங்களுக்கும் தென்மராட்சியில் உள்ள ஒவ்வொரு சமூக மற்றும் பொது அமைப்புகள் அனைத்தும் தனித்தனியாகவே எமது ஆதரவை தெரிவிப்பது வழமை.

30 சமூக மட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டம்! 1

ஆனால் நாளை முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமானது மனிதாபிமானத்தையும் எமது மக்கள் அனைவரினதும் இலவச சிகிச்சை உரிமையையும் வலியுறுத்தி முன்னெடுக்கப்படுவதால் தென்மராட்சியில் உள்ள அனைத்து சமூக பொது அமைப்புகள் ஆகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டாக ஆதரவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

எனவே தென்மராட்சியில் உள்ள சிறிய வியாபாரிகள் முதல் பாரிய வர்த்தகர்கள் மற்றும் அனைத்து தொழில் அமைப்புகளும் பூரண பங்களிப்பை வழங்குவோம் என்பதை உரிமையோடு தெரிவித்துக் கொள்கின்றோம் என அவர்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments