வெம்ப்லி மைதானத்தில் ‘TAMIL EELAM JUSTICE’ பதாகையுடன் வீரர் விமல் வீற்றிருந்த காட்சி தமிழீழம் தொடர்பான நீதிக்கான கோரிக்கையை உலகமறிய ஒரு வலுவான செய்தியாக மாற்றியுள்ளார்
(UK national league football match )கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியின் முக்கிய வீரரான திரு. விமல் அவர்கள், போட்டிக்குப் பிறகு “TAMIL EELAM JUSTICE” எனும் எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஒரு பதாகையுடன் தூக்கிப் பிடித்தவாறு வெம்ப்லி மைதானத்தில் வலம் வந்தார்.
இந்நிகழ்வானது அந்த நேரத்தில் மைதானத்தில் கூடியிருந்த 52,000 பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. வீரர் விமலின் இந்த செயலால் தமிழீழம் தொடர்பான நீதிக்கான கோரிக்கையை உலகமறிய ஒரு வலுவான செய்தியாக மாற்றியுள்ளார்
