கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் பலி!

You are currently viewing கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் பலி!

யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் ஒருவன் நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

யாழ். பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவன் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய நிலையில் கடந்த 3 மாதங்களாக பாடசாலைக்கும் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து கிராம சேவகர், அதிபர், ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வந்து, பாடசாலைக்கு வருமாறு கோரியும் பாடசாலைக்கு செல்லவில்லை எனவும், இதன் காரணமாக மாணவனின் கைப்பேசியினை தந்தை பறித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த மாணவன் 25.10.2024 அன்று வீட்டினை விட்டு வெளியேறி சென்றுள்ள நிலையில், இது குறித்து பெற்றோர் யாழ்ப்பாணம் சிறீலங்கா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

குறித்த மாணவன் பரந்தனில் உள்ள தமது வீட்டில் நின்றதாக கூறி உறவினர் ஒருவர் அவனை நேற்றிரவு (02) வீட்டிற்கு அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து நேற்று அதிகாலை 2 மணிவரை விளையாடிவிட்டு வீட்டிற்கு அருகேயுள்ள காணியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

இந்நிலையில் மாணவனது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments