ஜரோப்பிய நாடுகளிடம் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு மனிதநேயசெயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்படும் ஈருருளிப்பயணப்போராட்டம் 6ஆம் நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

முக்கிய குறிப்பாக 40 மாநகரசபைகளிடமும், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும்என்பதனையும் தமிழர்களுக்கு தமிழீழமே தீர்வு என்பதனையும் வலியுறுத்தினார்கள்.
அத்தோடு எதிர் வரும் 46 வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் பெளத்த சிங்களப் பேரினவாதசிறிலங்கா அரசிற்கு கால நீடிப்பு மேலும் வழங்கக்கூடாது மாறாக தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீனவிசாரணையினை முன்னெடுக்க வேண்டும் என்பதனை பிரான்சின் வெளிவிவகாரத்துறை அமைச்சு, பிரான்சுஅரசதலைவருக்கும் மாநகரசபை ஊடாக வலியுறுத்துவதாக உறுதிமொழிகளை முதல்வர்கள் தந்திருந்தார்கள் . அத்துடன் பிரஞ்சு ஊடகங்களும் இவ்வறவழிப்போராட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது.


தற்காலச் சூழலில் தாயகத்தில் தமிழினவழிப்பின் சான்றுகளை அழிப்பதன் மூலம் எம் மக்களின் வடுக்களை மறைத்துஅனைத்துலக சுயாதீன விசாரணையில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம் என பெளத்த சிங்களப் பேரினவாத அரசுஎண்ணிக்கொண்டிருக்கின்றது. அந்தவகையில் யாழ்பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள தமிழின அழிப்புநினைவுத்தூபியினை அழித்த சிறிலங்கா பேரினவாத அரசிற்கு எதிராக எம் மக்கள் வெகுண்டெழுந்து வெகுசனபோராட்டங்களில் ஈடுபட வேண்டும். அவ்வாறே தமிழின அழிப்புகுற்றவாளிகளை அனைத்துலக குற்றவியல்நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தமிழர்களுக்கான நீதியினையும் விடுதலையும் பெற ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்.








அத்தோடு எதிர் வரும் 46 வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பிக்க இருக்க சொற்பநாட்களே உள்ள நிலையில் நாட்களை எண்ணி மேலும் பல அறவழிப்போராட்டங்களினை மேற்கொண்டு புலம் பெயர்நாடுகளை எம் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வைக்க வேண்டும் என்பதனை தமிழீழக்குடிமக்களாகிய எம் உறவுகளிடம் உரிமையோடு கோருகின்றோம்.