8 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன – இவர்கள் யாருடைய பின்னணி!

You are currently viewing 8 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன – இவர்கள் யாருடைய பின்னணி!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை 8 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் அரசாங்க அதிபருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

வியாழக்கிழமை (3) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

அதற்கமைய, எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் விடுதலை அரசியலை சிதைப்பதற்காக எதிரிகளால் திட்டமிடப்பட்டு சுயேட்சைக் குழுக்கள் இறக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது இவர்களுடை பிரச்சாரங்கள் உரிமை அரசியலை நலிவடைய செய்து சலுகை அரசியலை உருவாக்கி மக்களின் உணர்வுகளை சிதறடிப்பதே நோக்கமென தெரியவருகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments