GCE A/L, GCE O/L, 5-ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு!

You are currently viewing GCE A/L, GCE O/L, 5-ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு!

க.பொ.த. உயர்தரம், க.பொ.த. சாதாரண தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் வெளியாகியுள்ளன.

கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

2021 ஆண்டுக்கான குறித்த பரீட்சைகள் கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த நிலையில் தற்போது அவற்றுக்கான புதிய திகதிகள் அவிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில்,

5 ஆம் தர புலமைபரிசில் பரீட்சைகள் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சனக்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர் தர பரீட்சை 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதி சனிக்கிழமை வரையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாதாரண தர பரீட்சை 2022 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஜூன் மாதம் 1 ஆம் திகதி புதன் கிழமை வரையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments