கொட்டடியை சேர்ந்த மூவர் ஹெரோயினுடன் கைது!

You are currently viewing கொட்டடியை சேர்ந்த மூவர் ஹெரோயினுடன் கைது!

500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கொட்டடிப் பகுதியைச் சேர்ந்தவர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட சிரேஷ்ட சிறீலங்கா காவற்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் யாழ். மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கொட்டடி பகுதியில் உள்ள வீடு ஒன்றினை சோதனையிட்டபோது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு ஏற்கனவே போதைப் பொருள் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்தோடு கைது செய்யப்பட்டவர்களுக்கு மாதகல் பகுதியிலிருந்து போதைப்பொருள் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் யாழ்ப்பாண சிறீலங்கா காவற்துறையினர் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதோடு விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments