தமிழ்மக்களின் எதிர்ப்பால் ஈழப்பயணத்தை இரத்து செய்த குசுப்பு!

You are currently viewing தமிழ்மக்களின் எதிர்ப்பால் ஈழப்பயணத்தை இரத்து செய்த குசுப்பு!

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றால் துடைப்பக்கட்டையால் ஆசீர்வாதம் செய்யப்படும் என தமிழர் அமைப்பினர் எச்சரிக்கையால் குஷ்பு தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். இலங்கையில் முன்னதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைநிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து பாடகர் ஹரிஹரனின் இசைநிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தொகுத்து வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த போது, ஈழத்தமிழர் போராட்டம் பயங்கரவாதம் என விமர்ச்சித்ததன் காரணமாக அவர் இலங்கைக்கு எப்போது வந்தாலும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என ஈழத்தமிழர் அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.

தற்போது,  வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்ரமணியம், நடிகை குஷ்பு இலங்கைக்கு வருகை தந்தால் துடைப்பக்கட்டை ஆசீர்வாதம் வழங்கப்படும் என எச்சரித்திருந்தார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் முடிவை கைவிடுவதாக குஷ்பு முடிவு செய்துள்ளார்.

இது குறித்து X தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள குஷ்பு “ யாருக்கும் அஞ்சி இந்த முடிவை எடுக்கவில்லை. என் மாமியாரின் இதய அறுவை சிகிச்சையை முன்னிட்டே நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments