தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்!

You are currently viewing தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப் பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று ஆரம்பமாகியது. இந்த போராட்டமானது இன்று மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த போராட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இடம்பெற்று வருகிறது.

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் ,தனியார் காணிகளை அபகரித்து கட்டிய விகாரையை உடனே அகற்று , சட்டவிரோதமாக அமைத்த விகாரையை உடனே அகற்று  என்னும் கோசங்களுடன் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் இடம்பெறுகிறது.

தையிட்டியில் தொடரும் போராட்டம். தையிட்டியில் தமிழர்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையைினை அகற்றுமாறு கோரி இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.

அபகரிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.
தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்! 1

 

தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்! 2
தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்! 3
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments