பிரித்தானிய மக்களுக்கு எமனாக மாறிய நாய்: சுட்டுக் கொன்ற அதிகாரிகள்!

You are currently viewing பிரித்தானிய மக்களுக்கு எமனாக மாறிய நாய்: சுட்டுக் கொன்ற அதிகாரிகள்!

பிரித்தானியாவின் டெர்பியில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திய நாய் ஒன்றை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். பிரித்தானியாவின் டெர்பியில் உள்ள நபர் ஒருவர் நாய் ஒன்றால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்ததை தொடர்ந்து, அந்த நாயை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்த நாய் பொதுமக்களுக்கு “ஆபத்தை முன்வைக்கிறது” என்ற புகார் எழுந்ததை தொடர்ந்து, அந்த விலங்கை அதிகாரிகள் சனிக்கிழமை கேமரூன் சாலையை சுற்றி வளைத்தனர்.

பின்னர் துப்பாக்கி அதிகாரிகளால் நாய் கொல்லப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை பிற்பகலில் சம்பந்தப்பட்ட பகுதிகளை சுற்றி பொலிஸார் தங்கியிருந்தனர்.

அத்துடன் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை மற்றும் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்வதால் அதிகாரிகள் அப்பகுதியில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சுட்டுக் கொல்லப்பட்ட நாய் என்ன இனம் என்பது இன்னும் தெரியவில்லை.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments